மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், “உலகம் உங்கள் கைகளில்” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று (05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றினார். இந்நிகழ்வினை திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கலைக் கல்லூரியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டு 821 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள். (PDF 70KB)

