“உலகம் உங்கள் கையில்” திட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 28/01/2026
“உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் உயர் கல்வி பயிலும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 4481 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் வழங்கி, தண்டுரை அரசு மாதிரி பள்ளியில் விடுதி கட்டும் பணிகளுக்கும் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கும், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சி செந்தூர்புரம் முருகன் கோவில் தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தனியார் நிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பூங்கா பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். (PDF 50KB)




